தாம்பரம் -கொச்சுவேலி ரயில் சேவை நீட்டிப்பு.

வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து  திருச்சி மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் கடையநல்லூர் தென்காசி செங்கோட்டை  புனலூர் கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலி வடக்கு ரயில் நிலையத்துக்கு இயக்கப்படுகிற  வாராந்திர 3ஏசி எகானமி வசதி கொண்ட 14 பெட்டிகளோடு இயக்கப்படுகிற சிறப்பு ரயில் 31.01.2025  வெள்ளிக்கிழமை முதல் 27/06/25 வெள்ளிக்கிழமை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இந்த ரயிலில் கூடுதலாக இரண்டு 3 AC பெட்டிகளும் இணைக்கப்படும் . மொத்தம் 16 ஏசி பெட்டிகளோடு இயங்கும்.இதே போல மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் வடக்கிலிருந்து  தாம்பரத்திற்கு 29/06/25 ஞாயிறு வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கம் தென்னக ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ளது.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *