வேலூர் கோட்டை மைதானத்தில் “இலக்கு 2026” என்ற தலைப்பில் அதிமுக மாநாடு நடைபெற்று வருகிறது இதில் கலந்து கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, சென்னை கோட்டைக்கு செல்வதற்காகவே வேலூர் கோட்டையில் திரண்டு உள்ளோம். கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் கூட்டம்தான் இந்த மாநாடு ஒரு கட்சி வலுவாக இருக்க இளைஞர்கள் அதிகமாக இருக்க வேண்டும் இளைஞர்களை அதிகம் கொண்டிருக்கும் கட்சி அதிமுக.
அதிமுக யாரையும் நம்பி இல்லை மக்களை நம்பியே உள்ளது. குழந்தைகள் தன்னை “அப்பா, அப்பா” என பாசத்தோடு அழைப்பதாக முதலமைச்சர் கூறி வருகிறார். பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் அப்பா என கதறுவது அவருக்கு கேட்கவில்லையா?
கூட்டணி வேறு கொள்கை. வேறு 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான வெற்றிக் கூட்டணி அமைத்து 234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் என பேசினார்.
2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடும்-எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
