காரில் கடத்தி வந்த 12 மூட்டை குட்கா ஹான்ஸ் பறிமுதல்.

 

திருவண்ணாமலை மாவட்டம்

பெங்களூரு திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில்
செங்கம் அடுத்த
பக்கிரி பாளையம் பகுதியில் செங்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது.

விழுப்புரம் சென்ற காரை மடக்கி சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுமார் 1 இலட்சம் மதிப்பிலான 12 மூட்டைகளில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கார் டிக்கியில் வைத்து கடத்தியது தெரிய வந்தது.

போதை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து செங்கம் காவல் நிலையத்திற்கு இரண்டு பேரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் *விழுப்புரம் பகுதி சேர்ந்த அய்யனார் (வ-43) மற்றும் சக்திவேல் (வ-39) என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *